தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை? வெளியான அறிவிப்பு!


தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை? வெளியான அறிவிப்பு!


தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கான மழை பற்றிய முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “வெப்பசலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 22.03.2022, 23.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

ஸ்டாலின் கொடுக்கும் செம சர்ப்ரைஸ்: ஜூன் மாதம் முதல்!

24.03.2022 முதல் 26.03.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:
22.03.2022, 23.03.2022: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவு!

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

வாத்தலை அணைகட்டு (திருச்சி) 6, மோகனூர் (நாமக்கல்) 6, கரூர் (கரூர்), முசிறி (திருச்சி) தலா 5, மாயனூர் (கரூர்), சேலம் (சேலம்) தலா 4, தருமபுரி (தருமபுரி), ஆத்தூர் (சேலம் மாவட்டம்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), கோத்தகிரி (நீலகிரி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), ஏற்காடு (சேலம்), மணப்பாறை (திருச்சி) தலா 3, விரிஞ்சிபுரம் (வேலூர்), உதகமண்டலம் (நீலகிரி), குளித்தலை (கரூர்), மங்களபுரம் (நாமக்கல் மாவட்டம்) தலா 2, அரூர் (தருமபுரி), வேலூர் (வேலூர்), டேனிஷ்பேட்டை (சேலம்), கெட்டி (நீலகிரி) , செங்கம் (திருவண்ணாமலை), பஞ்சப்பட்டி (கரூர்), தருமபுரி (தருமபுரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), மேட்டூர் (சேலம்), சமயபுரம் (திருச்சி), காட்பாடி (வேலூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), திருமானூர் (அரியலூர்) தலா 1.

குறிப்பு: நேற்று காலை வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 0830 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபார் தீவு-போர்ட்பிளேரிலிருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மதியம் மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும்.

எடப்பாடி கோட்டையில் ஓட்டை: சேலத்தில் கெத்து காட்டும் சசிகலா

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

22.03.2022,: வடக்கு அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மியான்மர் கடற்கரை பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog