பத்திரிகையாளர் குடும்பத்திற்கு நிவாரணம்: அமைச்சர் வழங்கினார்
சென்னை: பத்திரிகை துறையில் புகைப்பட கலைஞராக பணியாற்றிய குமார் ட்டி, பத்திரிகையாளர் நல நிதியத்திலிருந்து சிறப்பு நிகழ்வாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று வழங்கினார். தமிழரசு அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி இயக்குபவராக பணியாற்றிய முரளிகிருஷ்ணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததையொட்டி, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.அப்போது செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன், கூடுதல் இயக்குநர்கள் அம்பலவாணன், பாண்டியன் உடனிருந்தனர்..
Tags:
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment