மெட்ரோ ரயில் பணிக்காக பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம்: ஆவடி காவல் ஆணையரகம் தகவல்



சென்னை: பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் பணி நடக்கயிருப்பதால் நேற்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:
பூந்தமல்லி பஸ் நிலையம் முதல் கரையான்சாவடி வரை மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மிகவும் துரிதமாக முடிக்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நேற்று முதல் கரையான்சாவடியிலிருந்து பூந்தமல்லி பஸ்நிலையம் வழியாக செல்ல கனரக வாகனங்களான பஸ், லாரி, டிரக் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை.

ஆனால் ஆம்புலன்ஸ், இலகு ரக வாகனம், இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போரூர், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி வழியாக பூந்தமல்லி பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog