Popular posts from this blog
Denver weather: Weekend storms bring wind, hail risks
பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் ஷாக் - ஐகோர்ட் கிடுக்கிப்பிடி ஆர்டர்!
பள்ளிக் கல்வித் துறையில் குரூப் ஏ, குரூப் பி பிரிவு அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள திருவரங்குளம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ, தனக்கு வழங்கப்பட்ட இட மாறுதலை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விரிவாக படிக்க >>
Comments
Post a Comment